Jul 28, 2006

நன்றி!

மரணம்!

சிலருக்கு சோகத்தையும்,
பலருக்கு வெறுமையும் தரும்,
எனக்கோ அந்த மரணம்
ஆறுதல் தந்து இருக்கிறது.

தலைப்பிட்ட வாத்தியாருக்கும்,
இந்த இடத்தை அடைய
வழிவிட்ட அனைவருக்கும் நன்றி!

தளம் அமைத்த
தேன்கூட்டிற்கும்,
பரிசளிக்கும்
தமிழோவியத்துக்கும் நன்றி!

வாக்கு தந்து ஏமாற்றும்
அரசியல்வியாதி போலல்லாமல்
நான் கேட்காமலே
வாக்களித்து எனக்கும்
ஒரு இடம் கிடைக்க செய்த
அத்துனை மக்களுக்கும்
என் நன்றி!


இதன் முன்னுரை

வாக்களித்த அந்த 30 பேருக்கும் என் இதயபூர்வமான நன்றிங்க!

15 விதை(கள்):

Unknown said...

நண்பா இந்த முறை நாலு அடுத்த முறை உன் இலக்கு 1 ஆக இருக்கவும் அதை நீ அடையவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

பொன்ஸ்~~Poorna said...

கலக்குறீங்க இளா!!

ILA (a) இளா said...

இலக்கு என்றெல்லாம் ஒன்றும் இல்லை நண்பா. எல்லாம் நம் மக்களே, போட்டியில் வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சியே.. வாழ்த்துக்கு நன்றி நட்பே

ILA (a) இளா said...

பொன்ஸ், உங்க யானை கலக்குவதை விடவா?

Muthu said...

வாழ்த்துக்கள்

அனுசுயா said...

வாழ்த்துக்கள் இளா

மணியன் said...

வாழ்த்துக்கள்!

கைப்புள்ள said...

வாழ்த்துகள் இளா.

நாகை சிவா said...

விவ் வாழ்த்துக்கள்.
உங்கள் பதிவு கண்டிப்பாக வெற்றி பெரும் என்று நினைத்து இருந்தேன். என் கணிப்பு பலித்து குறித்து மிக்க மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள்.
4 ஒன்றாக வேண்டும்.
நம்ம வீட்டாண்ட போயி பார்க்கவும்.

ILA (a) இளா said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க முத்து(தமிழினி).
வாழ்த்துக்கு நன்றிங்க மணியன்.
வரப்புக்கு முன்னாடி வராதவங்க எல்லாம் வந்து இருக்கீங்க, அதுக்கும் ஒரு நன்றி.

ILA (a) இளா said...

அனுசுயா, உங்களுக்கு ஒரு பெரிய நன்றிங்க. போட்டியிலிருந்து விலகிக்கலாம்னு நினைக்கும்போதுதான் உங்க தனி மடல் கிடைச்சுது. அது ஒரு ஆறுதலா இருந்துச்சு. அப்படியே ஆறுதல் பரிசும் கிடைச்சிருச்சு. நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி.

ILA (a) இளா said...

கைப்பு, நன்றிய்யா.
சிவா, இலக்கு வெச்சுகிட்டு வரப்ப கட்டலைங்க, எல்லாம் ஒரு ஆத்ம திருப்திக்குதான். அடுத்தமுறையும் போட்டியிடுற மாதிரி இருந்தாவும் இலக்கு முடிவு பண்றாமாதிரி இல்லங்க.

ILA (a) இளா said...

உங்க வீட்டுல நம்ம் பேரையும் சேர்த்ததுக்கு நன்றிங்க சாமியோவ்.

மா சிவகுமார் said...

இளா,

தாமதமாகவேனும், என் வாழ்த்துக்களையும் பிடியுங்கள்!

இதைக் கவிதையாக வடித்த பொழுதில் பெரிதுவக்கும் வண்ணம் தேன் கூட்டில் வாசகர்கள் அங்கீகாரம் கிடைத்ததற்கு பாராட்டுக்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

உங்கள் நண்பன்(சரா) said...

வாழ்த்துக்கள்!! இளா!


அன்புடன்...
சரவணன்.